பிக்பாஸ் 2 வில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் வீட்டில் இவர் நடித்துக்கொண்ட விதம் பலரை முகம் சுழிக்க வைத்தது. இருந்தாலும் இறுதிவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யா வெளியே வந்த பின் நடிக்கும் முதல் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. ரொமாண்டிக் காமெடி வகையில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக மகத் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரபு இந்தப்படத்தை இயக்குகிறார்.
மகத் பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியே வந்தபின் சுந்தர் சி இயக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment