செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் சூர்யா கே.வி.ஆனந்த் படத்தில் பிசியாகி விட்டார்.
இதனால் சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே அப்டேட் எதாவது கொடுங்கள் என படக்குழுவினரை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.
இது குறித்து செல்வராகவன் நேற்று டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் "ரசிகர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அப்டேட் வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் விடமுடியாது. நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க முடியும்" என்று செல்வராகவன் கூறியுள்ளார்.
My humble request. We work hard and we work in silence. Updates will come at the right time. Not every third day or every week. And i strongly believe that if you give us strength we will work much more harder towards our goal. #NGK— selvaraghavan (@selvaraghavan) November 27, 2018
செல்வராகவன் இந்த செய்தியை வெளியிட்ட பின் நீங்க எப்ப வேண்டுமானாலும் அப்டேட் கொடுங்க ஆனா படம் சொல்லி வைச்சி அடிக்கிற கில்லி மாதிரி இருக்கனும் என்று சூர்யா ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment