எக்ஸ் வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அகோரி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தவர் ரியாமிகா. 26 வயதான இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். நடிகை ரியாமிகாவுக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.
மேலும் ரியாமிகாவின் தம்பிக்கு நிரந்தர வேலை ஏதும் இல்லாததால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். இதுவும் தற்கொலை ஒரு காரணமாக இருக்குமோ என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment