அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தது தான் தற்போதைக்கு வைரல் டாக். எந்த நியூஸ் சேனல் பார்த்தாலும் அஜித் பற்றிய செய்திகளும் அவரின் அரசியல் பார்வை குறித்த விவாதங்களையும் நாம் இரண்டு நாட்களாக காண முடிந்தது.
நேற்று அஜித் வெளியிட்ட அறிக்கைக்கு பின் அவரது ரசிகர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அஜிதின் நற்பண்புகள் குறித்து பிரபல நடிகர் ராஜ்கிரண் புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் "எந்த விதமான முகமூடிகளையும் அணிந்து கொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், தன் உழைப்பை மட்டுமே நம்பி, யாரிடமும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல், எல்லோரையும் சமமாய் பாவித்து, நேசித்து அவரவர்க்கு உரிய கடமைகளை உணர்த்தி, மனித நேராக வாழும் அன்புத் தம்பி அஜித். "வாழ்க வாழ்க" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment