Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

திருமண தேதியை அறிவித்தார் தீபிகா படுகோனே !


பத்மாவதி உள்ளிட்ட பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலிக்கிறார்கள் என பாலிவுட் ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதை இவர்கள் இருவரும் பெரிதாய் கண்டுக்கொள்ளவில்லை.

இந்த கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் உடனான திருமண தேதியை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தீபிகா படுகோனே ஒரு மடல் வடிவில் வெளியிட்டுள்ளார்.


அதில் "எங்கள் குடும்பத்தாரின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்கள் மீது நீங்கள் காட்டிவரும் அன்புக்கு மிக்க நன்றி தெரிவிப்பதுடன் இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்" என தீபிகா படுகோனே  குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த பல சினிமா பிரபலங்கள் ரன்வீர் மற்றும் தீபிகா ஜோடியை பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages