Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 18, 2018

எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லிடுங்கள் கௌதம் சார் சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை ?


சிம்பு ரீ- என்ட்ரி கொடுத்ததில் இருந்து ரொம்பவே பிஸி ஆகிவிட்டார்.  நீண்ட நாட்களாக சிம்பு படம் வராமல் சோர்ந்து போன அவரது ரசிகர்களுக்கு செக்க சிவந்த வானம் எனும் எனர்ஜி டானிக்கை கொடுத்து ஃபுல் பார்ம்க்கு கொண்டுவந்துவிட்டார். ரசிகர்கள் மட்டுமல்ல தானும் ஃபுல் ஃபார்ம் இல் இருக்கிறேன் என நிருபிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

அந்தவகையில் சிம்பு தற்போது கௌதம் மேனன் உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார். மேலும் இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மூவர் கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வேற லெவலில் இருந்ததால். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு வேளை இது விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லிடுங்கள் கௌதம் சார் சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages