Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 9, 2018

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் விரைவில் இணைந்து நடிக்க உள்ளனர்


அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் புதிய படத்தில் இணைந்து  நடிக்க உள்ளனர்.

செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய், விஜய் ஆண்டனியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்க உள்ளார்.

மேலும் அர்ஜீன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே கதாநாயகியாக  நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார்.

தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சார்லி சாப்ளின், பார்ட்டி  ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இப்படங்கள்  வெளிவந்த பிறகு இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages