கஜா புயலால் நிலைகுலைந்து போயிருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வந்தவண்ணம் உள்ளது. பாமர மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற உதவிகளை டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் பலரும் பணமாகவும் நிவாரண பொருளாகவும் உதவி வருகின்றனர். மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உதவி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி 12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைப்பதோடு தானும் களத்தில் இறங்கி பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Today I will be in Muthupet and surrounding areas. #SaveDelta pic.twitter.com/0EMwugSj2e— Kasturi Shankar (@KasthuriShankar) November 24, 2018
No comments:
Post a Comment