ஆண்ட்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் அவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தரமணி படத்திற்க்கு பிறகு ஆண்ட்ரியா நடித்ததில் சிறந்த படம் வடசென்னை என ரசிகர்கள் ஆண்ட்ரியாவை புகழ்ந்து தள்ளினர்.
இந்நிலையில் கன்னடத்தில் தில் என்ற படத்தை இயக்கிய சத்யா இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் அவர் போலீஸாக நடிக்கிறார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஜேகே, அசுதோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திமிரு புடிச்சவன் படத்தில் நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அவரை தொடர்ந்து ஆண்ட்ரியா தற்போது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திமிரு புடிச்சவன் படத்தில் நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அவரை தொடர்ந்து ஆண்ட்ரியா தற்போது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment