பிக்பாஸ் 2 வீட்டில் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டவர்கள் மகத் மற்றும் யாஷினி ஆனந்த். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடித்துக்கொண்ட விதம் பலரை முகம் சுழிக்க வைத்தது.
பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியே வந்த பின் மகத் மற்றும் யாஷினி ஆனந்த் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை பரதன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மகேஷ் மற்றும் வெங்கட் ஆகியோர் இணைந்து இந்தப்படத்தை இயக்குகின்றனர். ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது.
ஏற்கனவே இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்ட ஆட்டத்திற்கு இளைஞர்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். இந்தப்படம் முடிவதற்குள் என்னென்ன செய்வார்களோ என்ற பயம் இப்போதே ரசிகர்களுக்கு வந்துவிட்டது.
இதே போல் பிக்பாஸ் 2 வின் இன்னொரு போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவும் மகத்தும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment