செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அத்தாரின்டிகி தாரேதி என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி V என்ற எழுத்தில் படத்தின் டைட்டில் ஆரம்பிக்கும் என்ற கூடுதல் தகவலையும் கூறியிருந்தது.
அப்போது இருந்தே சிம்பு ரசிகர்கள் டைட்டிலை என்னவாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். சிம்பு செக்க சிவந்த வானம் படத்தில் பேசிய மாஸ் டையலாக்கான வந்தா ராஜாவாதான் வருவேன் இதுதான் டைட்டில் என பலர் கூறியிருந்தனர்.
சில நெருங்கிய வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த தகவலின்படி சிம்பு ரசிகர்கள் பலரும் கணித்த வந்தா ராஜாவாதான் வருவேன் என்பது தான் படக்குழு நாளை வெளியிட உள்ள டைட்டில் என்று தெரியவந்துள்ளது.
இப்பொழுது நாம் அனைவரும் காத்திருப்பதெல்லாம் இதோடு அதிகாரபூர்வ அறிவிப்புகாகதான்.
No comments:
Post a Comment