Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 24, 2019

திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேனா? ரித்விகா வருத்தம்


பரதேசி, கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்தவர் ரித்விகா. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2 நிகழ்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது பா.ரஞ்சித் தயாரித்து வரும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தில் நடித்தவரும் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் திருமணத்திற்கு பிறகு ரித்விகா தொடர்ந்து நடிக்கபோவதில்லை என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது.

இந்த செய்தி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரித்விகா "திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் பத்திரிகைகள் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று சேர்த்து எழுதியிருப்பது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்" என தெரிவித்துள்ளார்.

ரித்விகாவின் இந்த பதிவின் மூலம் அவர் திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடிக்கமாட்டார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages