தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.வி.எம் நிறுவனம் சில வருடங்களாக படம் எடுப்பதை நிறுத்தி விட்டது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடைசியாக வெளியான அயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு பெரிதாய் படங்கள் எதுவும் தயாரிக்க முன்வராத ஏ.வி.எம் நிறுவனம். தற்போது சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை ஹரி இயக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். தமிழ் சினிமாவில் தற்போது ஆரோக்கியமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏ.வி.எம் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment