செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகியாகளாக நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின் சூட்டிங் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு கூறியிருந்தது.
இந்நிலையில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment