செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
வந்தா ராஜாவாதான் வருவேன் வெளியாக இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் சிம்பு ரசிகர்கள் கட்-அவுட் வைத்தும், போஸ்டர் ஒட்டியும் மாஸ் காட்டி வருகின்றனர்.
இதையெல்லாம் கடந்து சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் சிம்புவின் பெயரை தன் தலையில் எழுதியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment