Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 31, 2019

புதிய சீரியல் மூலம் ரீ - என்ட்ரி ஆகும் சரவணன் மீனாட்சி ரஞ்சிதா!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில்  ஒன்றான சரவணன் மீனாட்சியில் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக நடித்துவந்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. கடந்த ஆண்டு இந்த சீரியல் நிறைவு பெற்றவுடன் சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது புதிய சீரியல் ஒன்றின் மூலம் ரீ - என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ள ரச்சிதா மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் திருமணமான வேடத்தில் உள்ளார். இதன் மூலம்  புதிய தொடர் குடும்பங்களை கவரும் வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages