தளபதி விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான முதல் படம் தெறி. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடன காட்சிகளின் போது எமி ஜாக்சனுக்கு சரியாக நடனம் ஆட வரவில்லையாம். டான்ஸ் மாஸ்டர் எவ்வளவோ சொல்லி கொடுத்தார்களாம். அங்கு நடனம் ஆடிக்கொண்டிருந்த விஜயும் சில டிப்ஸ் வழங்கினாராம். ஆனால் எமி ஜாக்சனுக்கு சரியாக நடனம் ஆட முடியவில்லையாம்.
இந்நிலையில் ஒரு காட்சிக்காக விஜய் எமி ஜாக்சனுக்கு முன்பாகவே லடாக்கிற்கு சென்றுவிட்டார். அப்போது எமி நன்றாக நடனம் ஆடியுள்ளார். அப்போது தான் படக்குழுவிற்கு புரிந்துள்ளது. இவ்வளவு நாளாக விஜயை பார்த்து தான் பயந்துள்ளார் என்று. இதை பற்றி எமியிடம் கேட்ட பொழுது ஆமாம் விஜய் போன்ற பெரிய டான்ஸரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பதட்டமில்லாமல் என்னால் ஆட முடியவில்லை என்றாராம்.
இந்த தகவலை தெறி படத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய ஷெரிப் தற்போது கூறியுள்ளார்.
No comments:
Post a Comment