Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2019

ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து முதன் முறையாக மனம் திறந்த கார்த்தி!

 

கார்த்தி நடித்துள்ள "தேவ்" திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரஜத் ரவிசங்கர் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தேவ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில்  பேசிய கார்த்தியிடம் "ஆயிரத்தில் ஒருவன் 2" வருமா என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த கார்த்திக் "தெரியல சார். அந்த படம் ரிலீஸ் ஆன போது அதற்கு இருந்த வரவேற்பு உங்களுக்கே தெரியும். நல்ல தயாரிப்பாளர் அமைந்தால் எடுக்கலாம்" என்று தெரிவித்தார்.

கார்த்தியின் முந்தைய படங்களான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் தேவ் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages