Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 16, 2019

அப்பா செல்போனை தட்டிவிட்டதை பற்றி முதன் முறையாக பேசிய கார்த்தி

தனது அப்பா செல்போனை தட்டிவிட்டதை பற்றி கார்த்தி முதன் முறையாக கருத்து கூறியுள்ளார்.


சில மாதங்களுக்கு முன் நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.

இந்நிலையில் சிவக்குமார் கடந்த வாரம் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சிவக்குமாரின் மகனும் நடிகருமான கார்த்தி முதன் முறையாக கருத்து கூறியுள்ளார். தேவ் படத்தின் ப்ரோமோஷன் மீட்டில் கலந்துகொண்ட கார்த்தியிடம் இது குறித்து கேட்கையில் "ஒருவர் அனுமதி இன்றி செல்ஃபி எடுப்பது தவறான விஷயம். அதை இன்னும் யாரும் புரிந்துகொள்வது இல்லை‌.


இதுவொரு சாதாரண விஷயம், இந்த விஷயத்தை மீடூ அளவுக்கு விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages