Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2019

இதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறீர்களோ? சிம்பு ரசிகரை கலாய்த்த பிரபல நடிகர்


சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ள பேங்காக் செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் சிம்பு அடுத்ததாக சரத்குமார் மற்றும் சித்தார்த் உடன் இணைந்து நடிக்கிறார். சில நெருங்கிய வட்டாரங்களில் இருந்து எனக்கு இந்த தகவல் கிடைத்தது. படத்தின் பெயர் "நானே சுட்டன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு நடிகர் சித்தார்த் காமெடியாக ரிப்ளே செய்துள்ளார். இந்த நியூஸ் எல்லாம் யாரோ சுட்ட வட மாதிரியே இருக்கே...ரூம் போட்டு யோசிக்கிறீர்களோ? இதுல கிளோஸ் டூ சோர்ஸ் வேற! நடத்துங்க என பதிலளித்துள்ளார்.



இதனால் ரசிகர்கள் அந்த நபரை கலாய்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages