Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

பிரபல நடிகை சரண்யா மோகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!

விஜயின் வேலாயுதம், ஈரம், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். தொடர்ந்து ஹோம்லி ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்த சரண்யா மோகன் தன்  நீண்ட  கால நண்பரான அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 2015 ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.


இந்த தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகன் இருக்கிறான். திருமணம் முடிந்த பிறகு சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்ட சரண்யா அடிக்கடி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தோன்றினார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சரண்யா மோகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரது கணவரே முகநூலில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி பிறந்தது பெண் குழந்தை என்றும்  அன்னபூர்ணா என பெயரிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages